வாசிப்பு முகாம் – 11.09.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 11.09.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம்

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினூடாக நல்லூர் பிரதேச சபையினால் கீழ்க்காட்டப்பட்ட அட்டவணை அடிப்படையில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம் நடைபெறவிருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பெண்நாய்களுக்கு இச்செயற்றிட்டத்தில் இலவசமாக சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சமூக ஆர்வலர்கள் வீதியோரங்களில் நடமாடும் கட்டாக்காலி பெண்நாய்களிற்கான கருத்தடையை மேற்கொள்ள சபைக்கு உதவி நல்கமுடியும்.
தற்போது நாட்டில் நாய்களினால் ஏற்படும் உயிர் இழப்புக்கள், விபத்துக்கள் அதிகரித்துள்ளநிலையில் தொற்றுநோய்களினால் நாளுக்கு நாள் பல மரணங்களும் சம்பவிக்கின்றன. மேலும் நாய்களின் பெருக்கம் காரணமாக பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை கருத்திற்கொண்டு தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்கு உரிய சிகிச்சைகளைப்பெற்று ஆரோக்கியமாக வாழ ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dogs 08.09.2025_page-0001
Dogs 08.09.2025_page-0002

வாசிப்பு முகாம் – 31.07.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 31.07.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

வாசிப்பு முகாம் – 25.07.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 25.07.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

வாசிப்பு முகாம் – 03.07.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 03.07.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

வாசிப்பு முகாம் – 12.06.2025

மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு12.06.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.

சுற்றாடல் தின நிகழ்வு – 05.06.2025

செம்மணி சந்தியிலிருந்து, யாழ் நோக்கி நல்லூர் பிரதேச சபையும், செம்மணி வீதி வழியாக வலி கிழக்கு பிரதேச சபையும், நாவற்குழி நோக்கி சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விசேட பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான சிரமதான நிகழ்வினை சபை உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் மேற்கொண்டனர்.

கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான பொது அறிவித்தல்

complaint assessment tax notice

நிறுக்கும், அளக்கும் உபகரணங்ளை சரிபார்த்தல் மற்றும் முத்திரை பதித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கமைய எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சகல வியாபார நிறுவனங்களிலும் வர்த்தகர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் சகல நிறுவை, அளவை மற்றும் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களினை 2025 / 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை செய்தல், சரி பார்த்தல் மற்றும் முத்திரை பதிக்கும் செயற்பாடுகள் கீழ்க்குறிப்பிடப்படும் கால அட்டவணைக்கமைய நடைபெறவுள்ளது.

தொ.இல

திகதி

நேரம்

இடம்

1

2025.03.17

மு.ப 9.00 பி.ப 1.00 வரை

நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், கொக்குவில்

2

2025.03.18 2025.03.19

2025.03.20

2025.03.21

 

மு.ப 9.00  பி.ப 1.00 வரை

நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், திருநெல்வேலி

எனவே வர்த்தகர்கள் அனைவரும் மேற்குறித்த தினங்களில் தங்கள் வியாபார நிலையங்களில் உள்ள சகல நிறுவை, அளவை உபகரணங்களினையும் பரிசோதனைக்குட்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாசிப்பு முகாம் – 07.03.2025

ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே ஆங்கில வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வாராவாரம் தொடா்ச்சியாக கொக்குவில் பொது நூலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வாசிப்பு முகாமொன்று யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. இவ் வாரம் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் பதிவுகள்.இதில் வளவாளராக கலந்து மாணவா்களை ஊக்குவித்த ஆசிரிய பயிற்றுவிப்பாளா் திரு.சீவரட்ணம் சுரேஸ்குமாா் அவா்களிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள்