நல்லூர் பிரதேச சபையானது CA Srilanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தது . குறித்த போட்டியின் விருது வழங்கும் நிகழ்வு 2024.12.02ஆந் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் B கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த விருது வழங்கும் நிகழ்வில் எமது சபைக்கான இணக்கப்பாட்டிற்கான சான்றிதழை (Certificate of Compliance) சபை சார்பில் சபையின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.
Category: நிழற்படங்கள்
உள்ளூர் அதிகாரசபைக்கான அபிவிருத்தித்திட்டம்
2185/74ம் இலக்க 2023.07.24ம் திகதிய வர்த்தமானி பிரசுரிப்பின் மூலம் 1978ம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்ட இல 41ன் கீழ் நல்லூர் பிரதேச சபையானது நகர அபிவிருத்தி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கான அபிவிருத்தித் திட்டம் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சபையின் தலைமை காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் என்பவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், சபையின் இணையத்தளத்திலும் (www.nallur.ps.gov.lk) முகநூல் பக்கத்திலும் (https://www.facebook.com/NallurPradeshiyaSabhaa) மென்பிரதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மற்றும் சபை அபிவிருத்தியில் அக்கறையுள்ள தரப்பினர் மேற்படி திட்டத்தினை பார்வையிட்டு அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களினை எதிர்வரும் 2025.01.21ம் திகதிக்கு முன்னராக எழுத்துமூலம் சபையின் தலைமை அலுவலகத்திலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ (npsnallur@gmail.com) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இது சபை ஆளுகைப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயம் என்பதனால் அதிக முன்னுரிமை வழங்கி தங்களால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் தெளிவான விபரங்களையும் தங்களுடைய தொடர்பு விபரங்களையும் இணைத்து அனுப்பி வைப்பது பயனுறுதியாக அமையும் எனக்கருதுகின்றேன்.
Online Payment
வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் வழங்கல்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான “அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல்” என்ற இலக்கை அடையும் நோக்கில் சபை ஆளுகையினுள் வதியும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலரின் சிபார்சிற்கமைய வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு ரூபா 621,626.40 பெறுமதியான தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் அடங்கிய பொதிகள் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டன. குறித்த பொதிகளை கர்ப்பிணித்தாய்மார்கள் சிரமமின்றி இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை உத்தியோகத்தர்களினால் கர்ப்பிணித் தாய்மார்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் 2024
எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வூட்டும் காணொளி இதுவாகும். பொதுமக்களின் உரிமையும் கடமையுமான வாக்களித்தலை சரியான முறையில் மேற்கொள்வதற்கு இக்காணொளி உறுதுணையாக அமையும்.
காணொளியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும் - https://www.facebook.com/61556532111908/videos/1309923283370589
தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு
”உலகை வென்றவா்கள் வாசித்த மக்களே“ எனும் தொனிப்பொருளிற்கு அமைய நல்லூா் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கொக்குவில், கோண்டாவில், நல்லூா் நூலகங்களின் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு 20.10.2024 அன்று இனிதே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணா் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபா் திரு.பெ.வசந்தன் ஆகியோரிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள். மற்றும் பரிசில்களைப் பெற்ற மாணவா்களிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, வரவேற்பு நடனத்தை வழங்கிய யா.கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவிகளிற்கும் பட்டிமன்றத்தை வழங்கிய திரு.எஸ்பீரியா் ஜனாா்த் குழுவினரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 6ம் வார நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 2ம் நாள்
தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 1ம் நாள்
சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான ”அனைவரும் உள்ளடங்கிய சமத்துவமான கல்வியையும் வாழ்நாளுக்கான கற்றல் சந்தர்ப்பத்தினையும் உறுதி செய்தல்” என்பதனை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தில் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 18 முன்பள்ளிகளுக்கு ரூபா 1,575,180.00 பெறுமதியான விளையாட்டுப்போட்டிகளிற்கான Band Sets வழங்கப்பட்டன.