கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான பொது அறிவித்தல்
மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கமைய எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சகல வியாபார நிறுவனங்களிலும் வர்த்தகர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் சகல நிறுவை, அளவை மற்றும் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களினை 2025 / 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை செய்தல், சரி பார்த்தல் மற்றும் முத்திரை பதிக்கும் செயற்பாடுகள் கீழ்க்குறிப்பிடப்படும் கால அட்டவணைக்கமைய நடைபெறவுள்ளது.
|
தொ.இல |
திகதி |
நேரம் |
இடம் |
|
1 |
2025.03.17 |
மு.ப 9.00 – பி.ப 1.00 வரை |
நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், கொக்குவில் |
|
2 |
2025.03.18
2025.03.19 2025.03.20 2025.03.21 |
மு.ப 9.00 – பி.ப 1.00 வரை |
நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், திருநெல்வேலி |
ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே ஆங்கில வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வாராவாரம் தொடா்ச்சியாக கொக்குவில் பொது நூலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வாசிப்பு முகாமொன்று யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. இவ் வாரம் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் பதிவுகள்.இதில் வளவாளராக கலந்து மாணவா்களை ஊக்குவித்த ஆசிரிய பயிற்றுவிப்பாளா் திரு.சீவரட்ணம் சுரேஸ்குமாா் அவா்களிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள்
ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே ஆங்கில வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வாராவாரம் தொடா்ச்சியாக கொக்குவில் பொது நூலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வாசிப்பு முகாமொன்று யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. 28.02.2025 அன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் பதிவுகள்.இதில் வளவாளராக கலந்து மாணவா்களை ஊக்குவித்த ஆசிரிய பயிற்றுவிப்பாளா் திரு.சீவரட்ணம் சுரேஸ்குமாா் அவா்களிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள்.
Save a Life மற்றும் நல்லூர் பிரதேச சபையுடன் இணைந்து Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் உதயபுரம் கடற்கரை கரையோரத்தில் துப்பரவுப்பணிகள் 2025.02.15ம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 2024.11.25ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 01.01.2025ம் திகதியிலிருந்து பெறுகை நடைமுறைகள் புதிய பெறுகை நடைமறை வழிகாட்டி மற்றும் கையேட்டின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி நல்லூர் பிரதேச சபை உட்பட 08 உள்ளூராட்சி மன்ற சபை உத்தியோகத்தர்களிற்கு ஓய்வுநிலை வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள் எந்திரி.எஸ்.சண்முகாநந்தன் அவர்களால் 22.01.2025, 06.02.2025 மற்றும் 07.02.2025ம் திகதிகளில் சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.