நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் உதவித்திட்டங்கள்

நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சபைநிதி மூலம் சபை எல்லைக்குள் வதியும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களிற்கு தையல் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள்,தொழில்முயற்சிக்கான இயந்திர உபகரணங்கள், சமையற்பாத்திரங்கள், கோழிக்குஞ்சுகளுடன் கோழிக்கூடு என்பன வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2023.05.18ஆந் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் அதனது பதிவுகள்..