எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல்.

எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல் கடந்த 2023.06.02 ஆம் திகதி எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நகரசபைகளின் கணக்காளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சித்திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் எமது சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த மென்பொருட்களின் பயன்பாடு மற்றும் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய சபைகளிற்கும் இம்மென்பொருட்களின் பாவனைனை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.