இலத்திரனியல் முறையிலான வருமான அறவீடு

எமது சபையினால் நாளாந்தம் வருமான அறவீடுகள் மேற்கொள்ளப்படும் போது விரைவாகவும் பொதுமக்கள் இலகுவான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத்தக்கவாறு மாற்றியமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக வங்கி அட்டைக்கான பணப்பரிமாற்றம் மற்றும் QR முறை மூலமான பண பரிமாற்றம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தமது கொடுப்பனவுகளை இலகுவான முறையில் மேற்கொள்ள முடிவதுடன், சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற நடமாடும் சேவை வழங்கலின் போதும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலை இலகுபடுத்த முடிகின்றது.