நல்லூர் பிரதேச சபையானது CA Srilanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தது . குறித்த போட்டியின் விருது வழங்கும் நிகழ்வு 2024.12.02ஆந் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் B கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த விருது வழங்கும் நிகழ்வில் எமது சபைக்கான இணக்கப்பாட்டிற்கான சான்றிதழை (Certificate of Compliance) சபை சார்பில் சபையின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.
Author: Web Editor
உள்ளூர் அதிகாரசபைக்கான அபிவிருத்தித்திட்டம்
2185/74ம் இலக்க 2023.07.24ம் திகதிய வர்த்தமானி பிரசுரிப்பின் மூலம் 1978ம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்ட இல 41ன் கீழ் நல்லூர் பிரதேச சபையானது நகர அபிவிருத்தி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கான அபிவிருத்தித் திட்டம் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சபையின் தலைமை காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் என்பவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், சபையின் இணையத்தளத்திலும் (www.nallur.ps.gov.lk) முகநூல் பக்கத்திலும் (https://www.facebook.com/NallurPradeshiyaSabhaa) மென்பிரதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மற்றும் சபை அபிவிருத்தியில் அக்கறையுள்ள தரப்பினர் மேற்படி திட்டத்தினை பார்வையிட்டு அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களினை எதிர்வரும் 2025.01.21ம் திகதிக்கு முன்னராக எழுத்துமூலம் சபையின் தலைமை அலுவலகத்திலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ (npsnallur@gmail.com) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இது சபை ஆளுகைப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயம் என்பதனால் அதிக முன்னுரிமை வழங்கி தங்களால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் தெளிவான விபரங்களையும் தங்களுடைய தொடர்பு விபரங்களையும் இணைத்து அனுப்பி வைப்பது பயனுறுதியாக அமையும் எனக்கருதுகின்றேன்.
Online Payment
வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் வழங்கல்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான “அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல்” என்ற இலக்கை அடையும் நோக்கில் சபை ஆளுகையினுள் வதியும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலரின் சிபார்சிற்கமைய வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு ரூபா 621,626.40 பெறுமதியான தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் அடங்கிய பொதிகள் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டன. குறித்த பொதிகளை கர்ப்பிணித்தாய்மார்கள் சிரமமின்றி இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை உத்தியோகத்தர்களினால் கர்ப்பிணித் தாய்மார்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் 2024
எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வூட்டும் காணொளி இதுவாகும். பொதுமக்களின் உரிமையும் கடமையுமான வாக்களித்தலை சரியான முறையில் மேற்கொள்வதற்கு இக்காணொளி உறுதுணையாக அமையும்.
காணொளியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும் - https://www.facebook.com/61556532111908/videos/1309923283370589
கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சியும் நூல்களின் கண்காட்சியும்
வாசிப்பதனாலும் எழுதுவதனாலும் மாணவர்கள் வல்லதோர் உலகில் வெற்றிவாகை சூடி வியத்தகு படைப்பாளிகளாகவும் நயத்தகு தலைவர்களாகவும் மிளிர்கிறார்கள். உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே! இத்தகு தாற்பரியத்தை உணர்த்தும் கண்காட்சியே இதுவாகும். இக் கண்காட்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. கே.எஸ்.சிவஞானராஜா அவர்களின் கையெழுத்துப்பிரதிகளின் கண்காட்சியும் திரு ச.சஜீவன் அவர்களின் சிறுவர் நூல்தொகுப்புகளின் கண்காட்சியும் இடம்பெறும்.
இடம் : கொக்குவில் பொது நூலக மண்டபம்
காலம் : 24.10.2024, 25.10.2024 (வியாழன்,வெள்ளிக்கிழமைகள்)
நேரம் : காலை 9.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு
”உலகை வென்றவா்கள் வாசித்த மக்களே“ எனும் தொனிப்பொருளிற்கு அமைய நல்லூா் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கொக்குவில், கோண்டாவில், நல்லூா் நூலகங்களின் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு 20.10.2024 அன்று இனிதே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணா் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபா் திரு.பெ.வசந்தன் ஆகியோரிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள். மற்றும் பரிசில்களைப் பெற்ற மாணவா்களிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, வரவேற்பு நடனத்தை வழங்கிய யா.கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவிகளிற்கும் பட்டிமன்றத்தை வழங்கிய திரு.எஸ்பீரியா் ஜனாா்த் குழுவினரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.






























































































