மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டங்களின் கருத்தரங்குகள் தொடர்பான அறிவிப்பு

நல்லூர் பிரதேச சபையில் 2023/2024ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக 25.09.2023 மற்றும் 30.09.2023 ஆகிய இரு தினங்களிலும் பி.ப 2.00 மணியளவில் நல்லூர் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இக்கருத்தரங்குகளில் பொதுமக்களையும், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள், விசேட தேவையுடையோர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் மேற்குறிப்பிட்ட இரு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் தவறாது கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.