வாசிப்பதனாலும் எழுதுவதனாலும் மாணவர்கள் வல்லதோர் உலகில் வெற்றிவாகை சூடி வியத்தகு படைப்பாளிகளாகவும் நயத்தகு தலைவர்களாகவும் மிளிர்கிறார்கள். உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே! இத்தகு தாற்பரியத்தை உணர்த்தும் கண்காட்சியே இதுவாகும். இக் கண்காட்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. கே.எஸ்.சிவஞானராஜா அவர்களின் கையெழுத்துப்பிரதிகளின் கண்காட்சியும் திரு ச.சஜீவன் அவர்களின் சிறுவர் நூல்தொகுப்புகளின் கண்காட்சியும் இடம்பெறும்.
இடம் : கொக்குவில் பொது நூலக மண்டபம்
காலம் : 24.10.2024, 25.10.2024 (வியாழன்,வெள்ளிக்கிழமைகள்)
நேரம் : காலை 9.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சியும் நூல்களின் கண்காட்சியும்
