உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான தாச்சிச் சுற்றுப் போட்டி

நல்லூர் பிரதேசசபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான தாச்சிச் சுற்றுப் போட்டி இன்றைய தினம் (2023.10.22 ஞாயிறு) கொக்குவில் பிடாரி அம்மன் சனசமூக நிலைய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இச்சுற்றுப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கோண்டாவில் ஸ்ரீநாராயணன் ச.ச.நிலைய மறுமலர்ச்சி வி.க சாம்பியனாகியது. பெண்கள் பிரிவில் அரியாலை பூம்புகார் ச.ச.நிலையம் சம்பியனாகியது.
அதன் சில பதிவுகள்